கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு QR கோடை இயக்கி சைக்கிளை எடுத்துச் செல்லலாம்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மனியம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைக்கிள் சேரிங் திட்டம் மற்றும் மக்கும் தன்மையுடைய பையோபேக் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், தண்ணீரில் கரையக்கூடிய பைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்தார். மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், காவல்ஆணையர் பெரியய்யா, போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு QR கோடை இயக்கி சைக்கிளை எடுத்துச் செல்லலாம்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மனியம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைக்கிள் சேரிங் திட்டம் மற்றும் மக்கும் தன்மையுடைய பையோபேக் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், தண்ணீரில் கரையக்கூடிய பைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்தார். மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், காவல்ஆணையர் பெரியய்யா, போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.