அரசின் தாய்சேய் நல சிறப்பு முகாமில் பயனடைந்த கர்ப்பிணி பெண்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் சார்பில் நடைபெற்ற தாய்சேய் நல சிறப்பு முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாய்சேய் நல சிறப்பு முகாம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட துறையின் துணை சுகாதார துறை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்த இந்த சிறப்பு முகாமை, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார். இம்முகாமில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஜனனி கர்ப்பகால பரிசோதனையும், ஸ்கேன் பரிசோதனையும் செய்து ஆலோசனைகள் வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் ஏற்பாட்டினை வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் வு.பிரவீன் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்தனர்.

முகாமில் 130 கர்ப்பிணி தாய்மார்களும், 65 பாலூட்டும் தாய்மார்களும், 58 குழந்தைகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. வால்பாறையில் இம்முகாமினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததாகவும், இது தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவித்தனர். இதில், வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் அமீது, மிச்சர்கடை முருகன், வழக்கறிஞர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...