போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கு : சுங்கத்துறை காவலர் உள்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை : உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட கெட்டாமெய்ன் ஹட்ரோக்லோரைட் என்கிற போதைப்பொருளை கடத்த முயன்றியது சுங்கத்துறை சோதனையில் தெரியவந்தது. விசாரணையில், தனியார் நிறுவனம் சார்பில் கப்பலில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த செல்வமணி என்பவர் கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் தொழிற்பாதுகாப்பு படையின் காவலராக பணியாற்றி வரும் தனது மைத்துனர் ராமகிருஷ்ணன் மூலம் ரூ. 1.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதையடுத்து, இருவரும் சுங்கத்துறை அந்நிய வர்த்தக மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1992 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கப்பட்டார். மேலும், செல்வமணி தடை செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் குருவியாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சுங்கத்துறை பதிவு செய்த இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...