உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை : உறவினர் உதவியுடன் இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் சுங்கத்துறை காவலர் மற்றும் அவரது உறவினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட கெட்டாமெய்ன் ஹட்ரோக்லோரைட் என்கிற போதைப்பொருளை கடத்த முயன்றியது சுங்கத்துறை சோதனையில் தெரியவந்தது. விசாரணையில், தனியார் நிறுவனம் சார்பில் கப்பலில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த செல்வமணி என்பவர் கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் தொழிற்பாதுகாப்பு படையின் காவலராக பணியாற்றி வரும் தனது மைத்துனர் ராமகிருஷ்ணன் மூலம் ரூ. 1.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் சுங்கத்துறை அந்நிய வர்த்தக மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1992 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கப்பட்டார். மேலும், செல்வமணி தடை செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் குருவியாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்கத்துறை பதிவு செய்த இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2010-ம் ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் சில்க் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட கெட்டாமெய்ன் ஹட்ரோக்லோரைட் என்கிற போதைப்பொருளை கடத்த முயன்றியது சுங்கத்துறை சோதனையில் தெரியவந்தது. விசாரணையில், தனியார் நிறுவனம் சார்பில் கப்பலில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த செல்வமணி என்பவர் கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறையில் தொழிற்பாதுகாப்பு படையின் காவலராக பணியாற்றி வரும் தனது மைத்துனர் ராமகிருஷ்ணன் மூலம் ரூ. 1.5 கோடி மதிப்பிலான 14.5 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் சுங்கத்துறை அந்நிய வர்த்தக மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1992 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கப்பட்டார். மேலும், செல்வமணி தடை செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் குருவியாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்கத்துறை பதிவு செய்த இவ்வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.