திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை : திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா மற்றும் அவரது தந்தையாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தொடர்ச்சியாக பல மோசடி வழக்குகள் பதிவாகி வருகிறது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மாவட்ட ஆட்சியருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். அதனடிப்படையில், நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டார். இச்சட்டத்தின்படி, மூவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு ஜாமினில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா மற்றும் அவரது தந்தையாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தொடர்ச்சியாக பல மோசடி வழக்குகள் பதிவாகி வருகிறது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மாவட்ட ஆட்சியருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். அதனடிப்படையில், நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் உத்தரவிட்டார். இச்சட்டத்தின்படி, மூவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு ஜாமினில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.