8,10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளோமா, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை : 8,10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளோமா, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 09-ம் தேதி (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோவை மண்டல அளவில் தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, ஓசூர், சேலம், மேட்டூர் அணை மற்றும் தாராபுரம் ஆகிய நகரங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 1,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது, தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ. 7,500 முதல் கிடைக்கும். அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி.,யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 8, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 09-ம் தேதி (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோவை மண்டல அளவில் தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, ஓசூர், சேலம், மேட்டூர் அணை மற்றும் தாராபுரம் ஆகிய நகரங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 1,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது, தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ. 7,500 முதல் கிடைக்கும். அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி.,யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 8, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.