முள்வேலியில் சிக்கிய கரடியை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர். 



கோத்தகிரி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது வனத்துறையினர் கரடிகளை விரட்டியும், கூண்டுகளை வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோத்தகிரி அருகே அரவேனு தவிட்டுமேடு பகுதியில் கரடி தனது 3 குட்டிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தை கடக்க முயன்றது. 



அப்போது, அதில் ஒரு கரடி முள்கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கூறினர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல் முள்வேலியை வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். அப்போது, கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது. வனத்துறையினரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்றாலும், குடியிருப்பு பகுதியிலேயே கரடியை விட்டதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலால் அப்பகுதியினர் அதிருப்தியடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் கரடிகள் தாக்கி தம்பதியர் இருவர் உயிந்தனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...