மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை : மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.