பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் காவல் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் காவல் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜின் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரது காவலை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜின் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரது காவலை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.