கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று  மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி விசாரித்த போது அதில் 108 பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 



இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த தர்மர் (50), பாண்டீஸ்வரன் (22),  இருளாண்டி (42) மற்றும் சதீஸ் குமார் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய கார், பணம் ரூ.1,50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...