கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இணையதள முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, அரிய வகை வரையாடு மற்றும் இயற்கை சூழல் கொண்ட அரிய தாவரங்களும் உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு கடந்த 10 ஆண்டாக சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், இன்று முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை உட்பட 6 வனசரகங்களில் உள்ள விடுதிகள் தங்கி இயற்கை அழகு, வனவிலங்குகள் கண்டு ரசிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, அரிய வகை வரையாடு மற்றும் இயற்கை சூழல் கொண்ட அரிய தாவரங்களும் உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு கடந்த 10 ஆண்டாக சுற்றுலா பயணிகள் நேரடியாக வந்து பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், இன்று முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை உட்பட 6 வனசரகங்களில் உள்ள விடுதிகள் தங்கி இயற்கை அழகு, வனவிலங்குகள் கண்டு ரசிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.