பேரனுக்காக பவுலராக மாறிய கருணாநிதி - வீடியோ

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சளி தொந்தரவு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால் அவருக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்பை’ அகற்றிவிட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். கருணாநிதியின் பேரனும், நடிகர் அருள்நிதியின் மகனுமான மகிளனை (2) மு.க. தமிழரசு தினமும் தூக்கிக் கொண்டு கருணாநிதியுடன் விளையாட வைப்பது வழக்கம். இந்த நிலையில், கருணாநிதி தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பதிவை மு.க. தமிழரசு வெளியிட்டுள்ளார்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்துவீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து மகிழ்கிறான். அப்போது, மகள் செல்வி கருணாநிதியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி, நீங்கள் பவுலர், நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தை போடுங்கப்பா என்கிறார். உடனே கருணாநிதி பந்து வீசுகிறார். இதை கொள்ளுப்பேரனும் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிக்கிறான். ஓடி விழும் பந்தை தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்து கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதி பந்தை வீசுவது போல் பாவலா செய்வதும், பந்தை வீசாமல் அடுத்த முறை வீசுவதும் சிரிப்பை உருவாக்குகிறது. உடனே செல்வியும் தமிழரசுவின் மனைவி மோகனாவும், எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார் என்று சிரிக்கின்றனர். கருணாநிதி பந்து வீசும் போதெல்லாம் ‘சூப்பர்’ என்று செல்வி உற்சாகப்படுத்தி கை தட்டுகிறார். எப்படி பந்து வீசுகிறார் பாருங்கள் என்று மோகனாவும் பேசுகிறார். விளையாடியது போதுமா? என்று கேட்கிறார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருக்கும் கொள்ளுப் பேரன் தாத்தா பந்து போடுங்க என்று அழைக்கிறான். இந்தக் காட்சிகள் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்ட இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...