மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய ஹெல்ப்-லைன் எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
14417 என்ற புதிய ஹெல்ப்-லைன் எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களின் மன அழுத்தம், புதிய பாடத் திட்டங்கள் முதலான பல சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். மேலும், எந்த பாடத்திட்டம், எந்தக் கல்லூரியில் உள்ளது? அதற்கான கல்வி உதவித்தொகை தொடர்பான ஏனைய விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஹெல்ப்-லைன் எண் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.