திருப்பூரில் 25802 பேர் +2 தேர்வு எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வை மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 25 ஆயிரத்து 802 பேர் எழுதினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வை மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 25 ஆயிரத்து 802 பேர் எழுதினர்.

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 198 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரத்து 212 மாணவர்களும், 13 ஆயிரத்து 607 மாணவிகளும், 983 தனித்தேர்வர்களும் என்று மொத்தம் 25 ஆயிரத்து 802 பேர் எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வு எழுத 77 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 77 தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் என 87 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து, தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.



இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில், "தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும் அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...