தொடங்கியது +2 தேர்வு : கோவையில் 38,833 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 903 பேர் எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 833 பேர் எழுதுகின்றனர். 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில், 86 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 30 ஆயிரத்து 28 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர, ஏழு மையங்களில் ஆயிரத்து 729 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 6 ஆயிரத்து 805 மாணவர்களும், ஒரு மையத்தில் 341 தனித் தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர். 



தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த மையங்களில் இருந்து 23 வழித்தடங்கள் மூலமாக காலை 6 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. 20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் 

கோவை கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 27 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 29 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 2 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 26 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 31 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த புகார்களை 0422-2391062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...