விலை வீழ்ச்சியால் தக்காளியை குளத்தில் கொட்டிய விவசாயிகள்

அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி : அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பான்மையான பகுதிகளில் விளைந்த தக்காளியை பறிக்க செலவு அதிகமாக இருக்கிறது. தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 2 கிடைப்பதால் பறிக்காமல் அப்படியே வயலில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டூர், புளியம்பட்டி, சிங்கலம், கதிரம்பட்டி போன்ற இடங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டும், போதிய விலை இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தக்காளியை டிராக்டர், டிராக்டராக குளத்தில் கொட்டி வருகின்றனர்.

விளைச்சல் குறைவான நேரங்களில் அதிக விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலை கிடைத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. விவசாயிகள் தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன வசதிகளையும், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முறையான பயிற்சியும் மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான், தங்கள் விளைவித்த பொருளை உரமாக்காமல், நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...