கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றபடுகிறது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் சுப முகூர்த்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று.
பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு.மருதாச்சல அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராகஜன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், முன்னாள் எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.