பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.