கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
நீலகிரி: கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், சிங்காரா, பார்சன்ஸ் வேலி, காட்டுக்குப்பை உட்பட 13 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. ஏற்கனவே அணைகளில் இருப்பில் உள்ள நீரும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கோடையில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடையில் மின் உற்பத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முக்கிய அணைகளான அப்பர் பவானி, பைக்காரா, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, மாயார் அணைகளில் நீர் சேமிக்கப்பட்டது.
மின்தேவை அதிகரிப்பு:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் உள்ள 30 அலகுகளும் தடையின்றி இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால், அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு தடையின்றி மின்உற்பத்தி செய்ய முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
மின் உற்பத்தி தடைபட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மின் உற்பத்திக்கான அணைகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதம் உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு அணைகளில் கூடுதல் நீர் இருப்பு உள்ளது. இதனால், கோடை மின் தேவையை சமாளிக்க முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இருநாட்கள் திடீர் மழை பெய்தது. மேலும், கோடை மழை பெய்தால் அணைகள் நிரம்பும் வாய்ப்புள்ளது, என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், சிங்காரா, பார்சன்ஸ் வேலி, காட்டுக்குப்பை உட்பட 13 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. ஏற்கனவே அணைகளில் இருப்பில் உள்ள நீரும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கோடையில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடையில் மின் உற்பத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முக்கிய அணைகளான அப்பர் பவானி, பைக்காரா, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, மாயார் அணைகளில் நீர் சேமிக்கப்பட்டது.
மின்தேவை அதிகரிப்பு:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் உள்ள 30 அலகுகளும் தடையின்றி இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால், அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு தடையின்றி மின்உற்பத்தி செய்ய முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
மின் உற்பத்தி தடைபட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மின் உற்பத்திக்கான அணைகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதம் உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு அணைகளில் கூடுதல் நீர் இருப்பு உள்ளது. இதனால், கோடை மின் தேவையை சமாளிக்க முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இருநாட்கள் திடீர் மழை பெய்தது. மேலும், கோடை மழை பெய்தால் அணைகள் நிரம்பும் வாய்ப்புள்ளது, என்றனர்.