நீலகிரியில் நீர்நிலைகளின் மூலம் மின்உற்பத்தி அதிகரிப்பு

கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீலகிரி: கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், பைக்காரா, மாயார், சிங்காரா, பார்சன்ஸ் வேலி, காட்டுக்குப்பை உட்பட 13 மின் நிலையங்கள் மூலம் தினசரி 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. ஏற்கனவே அணைகளில் இருப்பில் உள்ள நீரும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கோடையில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடையில் மின் உற்பத்தியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முக்கிய அணைகளான அப்பர் பவானி, பைக்காரா, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, மாயார் அணைகளில் நீர் சேமிக்கப்பட்டது.

மின்தேவை அதிகரிப்பு:

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் உள்ள 30 அலகுகளும் தடையின்றி இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கொண்டு தடையின்றி மின்உற்பத்தி செய்ய முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

மின் உற்பத்தி தடைபட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.

 

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மின் உற்பத்திக்கான அணைகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதம் உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு அணைகளில் கூடுதல் நீர் இருப்பு உள்ளது. இதனால், கோடை மின் தேவையை சமாளிக்க முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இருநாட்கள் திடீர் மழை பெய்தது. மேலும், கோடை மழை பெய்தால் அணைகள் நிரம்பும் வாய்ப்புள்ளது, என்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...