நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்திலுள்ள சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். பெரும்பாலும் சுற்றுலா தளங்களை காண வரும் இவர்களின் வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
உதகை நகரமான மார்கெட் பகுதியில் சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மார்கெட் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்னால் பிரதான சாலையை ஒட்டி உள்ள இடங்களை ஆக்கிரமைத்து கொள்வதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று சாலையின் மார்கெட் பகுதியில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை நகராட்சி நிர்வாகம் ஜெ.சி.பி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றியது.

உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்திலுள்ள சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். பெரும்பாலும் சுற்றுலா தளங்களை காண வரும் இவர்களின் வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
உதகை நகரமான மார்கெட் பகுதியில் சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மார்கெட் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்னால் பிரதான சாலையை ஒட்டி உள்ள இடங்களை ஆக்கிரமைத்து கொள்வதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று சாலையின் மார்கெட் பகுதியில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை நகராட்சி நிர்வாகம் ஜெ.சி.பி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றியது.
