திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கோயிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கோயிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 வாகனங்களில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், அம்பாள், ஆகிய பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பஞ்சமூர்த்திகள் சன்னதி வீதி, மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (புதன்கிழமை) சாமி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன, அன்ன வாகன காட்சிகளும் நடைபெறுகிறது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 வாகனங்களில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், அம்பாள், ஆகிய பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பஞ்சமூர்த்திகள் சன்னதி வீதி, மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (புதன்கிழமை) சாமி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன, அன்ன வாகன காட்சிகளும் நடைபெறுகிறது.