கார்த்திக் சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இந்திராணி முகர்ஜியின் மீடியா நிறுவனத்திற்கு சாதகமாக அனுமதி அளித்தார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் அட்வான்டேஜ் டிரேடிஜிக் கன்சல்டிங் நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் பெற்றது என்றும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் டெல்லி, மும்பை, குர்கான் மற்றும் நொய்டா உள்பட நாடு முழுவதும் 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அன்னிய முதலீடு வழங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ப.சிதம்பரம் உறவினர்கள் சஜய் சம்பூர்த்தி, ராம்ஜி நடராஜன், கைலாசம், மனோஜ் மோகன்கா உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறைகேடுகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன், தொழில் ரீதியான பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருந்த கார்த்திக் சிதம்பரம் இன்று காலை சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் அவரது வீட்டில் கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜிவாலா, பா.ஜ.க., அரசின் நிதி முறைகேடுகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஷி, துவர்கா தாஸ் உள்ளிட்டோரை காப்பாற்ற நினைக்கும் பா.ஜ.க., அரசு, மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...