கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நேதாஜிரோடு அருகில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நேற்று விக்னேஷ்-ன் பெற்றோர்கள் அழகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் சக நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் புட்டை உடைத்துப் பார்த்த பொழுது கையை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் விக்னேஸ் தற்கொலை முயற்சிக்குக் காரணம் காதல் தோல்வியா? அல்லது புளுவேல் விளையாட்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...