அறுவை சிகிச்சை செய்தவர் மாரடைப்பால் மரணம் : தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு

கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை : கோவையில் கைமூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (58). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முடிவெட்ட சலூன் கடைக்கு சென்றபோது கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரது வலது முழங்கை முட்டிக்குமேல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அருகிலுள்ள (பிரகதி மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அடுத்த நாள் மாலை( 26.02.2018 அன்று ) அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு மயக்க மருந்து முதுகு வழியாக செலுத்த முடியாததால் அவரிடம் சொல்லி வாய் வழியாக செலுத்தியுள்ளனர். 

பின்னர், அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு 7 மணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து 8.45 மணியளவில் மூச்சுத்திண்றல் ஏற்பட்டுள்ளது. அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். 20 நிமிடம் கழித்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.  வேறொரு தனியார் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்துள்ளார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லி வேறு மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியதை அடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.35 மணியளவில் கொண்டு வந்துள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக உடற்கூறாய்வியல் துறைக்கு எடுத்துச்சென்றனர்.

இது குறித்து இறந்தவரின் உறவினர் கண்ணன் பேசியதாவது :- கை முறிவுக்கு வந்த பாலகிருஷ்ணனை அறுவை சிகிச்சை செய்த பின்பு நலமுடன் இருந்தவர் இரண்டுஅணி நேரத்திற்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் மருத்துவமனை நிர்வாகம் அதிகளவு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்ட போது மருத்துவர்கள் இல்லாததாலும், என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரியாமல் மருத்துவர் பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர். என்றார்.

இதனிடையே, பாலகிருஷ்ணனின் இறப்புக்கு முக்கிய காரணம் மருத்துவமனையின் நிர்வாகம்தான் எனக்கூறி காந்திபுரத்திலுள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாலகிருஷ்ணனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய அவரது  உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...