பயிற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்

பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கோவை: பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.



கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெற்றிப் படிக்கட்டு பொதுத்தேர்வில் பங்கேற்கும் ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளி, பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் 2016-17 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து ஏழை எளிய மாணவ மாணவியர்களும் உயர்கல்வியை எளிதாக பெற வழிவகை செய்துள்ளது. இவ்விழா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விடச்செய்யும் விழா. 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அசாத்திய திறமை பெற்றவர்களாகவும், எச்சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர் என்பது சமீப காலமாக நிஜமாகி வருகின்றது. 

போதிய பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் வரும் காலத்தில் இந்திய நாட்டின் முக்கிய பணிகளை அலங்கரிப்பவர்களாக திகழ வேண்டும்." என்றார். 

இவ்விழாவில் மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யா, கோயம்புத்தூர் மாவட்ட பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...