கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.