காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை - நல்லசாமி

காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் உண்மைத் தன்மையை விரைந்து வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைத்ததற்காக மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வினர் பதில் கூறியே ஆக வேண்டும்.



மது அருந்திவிட்டு பலியான நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச்சடங்கில் யாரும் பங்கேற்க கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

கோதாவரியையும், காவிரியையும் இணைப்பதன் மூலம் கடலில் கலக்கும் 175 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த பேச்சில் காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது. 

நீரா பானம் தயாரிப்பதில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் இருக்க அரசு வழி வகை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போன்ற பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடியதே எடப்பாடி அரசின் சாதனை.

ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னும் பொதுமக்கள், தொழித்துறையை சேர்ந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அதன்பிறகே முழுமையான பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...