காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
கோவை: காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் உண்மைத் தன்மையை விரைந்து வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைத்ததற்காக மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வினர் பதில் கூறியே ஆக வேண்டும்.

மது அருந்திவிட்டு பலியான நடிகை ஸ்ரீ தேவியின் இறுதிச்சடங்கில் யாரும் பங்கேற்க கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கோதாவரியையும், காவிரியையும் இணைப்பதன் மூலம் கடலில் கலக்கும் 175 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த பேச்சில் காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது.
நீரா பானம் தயாரிப்பதில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் இருக்க அரசு வழி வகை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போன்ற பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடியதே எடப்பாடி அரசின் சாதனை.
ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னும் பொதுமக்கள், தொழித்துறையை சேர்ந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அதன்பிறகே முழுமையான பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.