கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும்.
06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும்.
தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும்.
06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும்.
தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

