சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்டிகரில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ண பிரசாத் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் ராமாஸ்வரம் கோவிலில் புரோகிதராக இருக்கிறார். இவரது மூத்த மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகரில் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (pgimer)-ல் மருத்துவ மேல் படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்ததாக அடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ராமசாமி , புவனேஸ்வரி ஆகியோர் சண்டிகர் புறப்பட்டுச் சென்றனர்.
வட மாநிலங்களில் படிக்கச்செல்லும் தமிழக மருத்துவ மாணவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறப்பது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மற்றும் சரத் பிரபு இறப்புக்குப் பின்னாவது வட இந்தியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு பேசியிருந்தால் கிருஷ்ணபிரசாத் உயிர் பிரிந்திருக்காது என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மர்மமான முறையில் மூன்று பேர் இறந்து பின்னும் அதற்கான காரணத்தை கண்டறிவதில் மத்திய அரசு அக்கறை எடுக்காதபோது, தமிழக அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் தரவில்லை. தமிழக மருத்துவர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முன் வந்தால்தான் மர்ம மரணத்திற்குத் தீர்வு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.