கல்லட்டி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு போலீஸார் அறிவுரை

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை கல்லட்டி மலைப்பாதையாகும். இந்த மலைப்பாதையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணிக்கு வாகனங்கள் செல்லவும், கனரக வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், உதகையை அடுத்த மசினகுடி பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முதல் திருவிழா கோலாகாலமாக களைக் கட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க கல்லட்டி மலைப்பாதை வழியாக இரவு 9 மணிக்கு மேல் இரவு நேர போக்குவரத்திற்கு பல கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 



மேலும், கல்லட்டி வாகன சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் 1 மற்றும் 2-வது கியரில் தான் செல்ல வேண்டும், வழிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது மற்றும் வழியில் யாரவது வாகனங்களை நிறுத்தினால் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...