திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சங்கர். இவருக்கும், ரெவின்யூ நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காரில் சென்றவர்கள் இருதினங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன இரண்டு பேரின் வீட்டாரும் உடுமலை போலீஸாரில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சடலமாக இருந்த அருண்சங்கர் மற்றும் மஞ்சுளாவின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சங்கர். இவருக்கும், ரெவின்யூ நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காரில் சென்றவர்கள் இருதினங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன இரண்டு பேரின் வீட்டாரும் உடுமலை போலீஸாரில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சடலமாக இருந்த அருண்சங்கர் மற்றும் மஞ்சுளாவின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
