திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.