பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு சோலையூர் பகுதியில் மூன்றாவது தடுப்பணை கட்டுவதற்கான பணியை துவங்கி விட்டது. ஏற்கனவே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இது ஐம்பது ஆண்டுகால கேரள அரசின் திட்டமாகும். 

தடுப்பணை கட்டுவதால் கோடைக் காலங்களில் கோவையில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். பலமுறை அணை கட்ட முயன்றும், முடியாத நிலையில் 15 ஆண்டுகளுக்குக் காவிரி ஆறு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாததை, கேரள அரசு சாதகமாக பயன்படுத்த முயல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே இப்பிரச்சனைக்குக் காரணமாகும். சிறுவாணி அணையில் 2 அடி தண்ணீர் வீணாக கேரள அதிகாரிகள் திறந்து விட்டதால், கோவையின் 10 நாட்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் வீணாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக கோவையில் வருகின்ற 3-ம் தேதி தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...