தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை கப்பல் துறை நீர்வளங்கள் மற்றும் ஆறு வளர்ச்சி & கங்கா புத்துணர்வு அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், பல திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகின்றார். இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.
வ.உ.சி. துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் ரூ. 290 கோடி மதிப்பிலான சரக்கு பெட்டகங்களைக் கையாளும் புதிய மூன்று கிரேன்களை அவர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே கட்டப்பட்ட சரக்கு வாகன நிறுத்தம் முனையத்தை அவர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை கப்பல் துறை நீர்வளங்கள் மற்றும் ஆறு வளர்ச்சி & கங்கா புத்துணர்வு அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், பல திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகின்றார். இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.
வ.உ.சி. துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் ரூ. 290 கோடி மதிப்பிலான சரக்கு பெட்டகங்களைக் கையாளும் புதிய மூன்று கிரேன்களை அவர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே கட்டப்பட்ட சரக்கு வாகன நிறுத்தம் முனையத்தை அவர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.