கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட அரசூர், கம்மாளப்பட்டி, பாப்பம்பட்டி, ராசிபாளையம், எஸ்.அய்யம்பாளையம், செஞ்சேரிபுதூர் மற்றும் வடவள்ளி ஆகிய 7 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, இருப்பிட மற்றும் முன் அனுபவச் சான்றிதழ்களோடு ரேசன் கார்டு நகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட அரசூர், கம்மாளப்பட்டி, பாப்பம்பட்டி, ராசிபாளையம், எஸ்.அய்யம்பாளையம், செஞ்சேரிபுதூர் மற்றும் வடவள்ளி ஆகிய 7 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, இருப்பிட மற்றும் முன் அனுபவச் சான்றிதழ்களோடு ரேசன் கார்டு நகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.