ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், அம்மாநில பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், அம்மாநில பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.