தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது. 

இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...