தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.
இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.