கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்கிய உரிமையாளர்கள்

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர்.

கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. அதனை வழங்க முன்வராத மாநில அரசு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையே நடத்தி வந்தது. இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது. 

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இருகூர் மற்றும் காளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பிளாட்களை அரசு கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்கப்பட்டது. காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் அரசின் முந்தைய விலையையே ஒப்புக் கொண்டு இடத்தை வழங்கியுள்ளனர். 

இதனிடையே, எஞ்சிய நில உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், ''சதுர அடிக்கு ரூ. 3,000 கொடுத்தால் இடத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.   

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...