கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர்.
கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர்.
பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. அதனை வழங்க முன்வராத மாநில அரசு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையே நடத்தி வந்தது. இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இருகூர் மற்றும் காளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பிளாட்களை அரசு கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்கப்பட்டது. காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் அரசின் முந்தைய விலையையே ஒப்புக் கொண்டு இடத்தை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, எஞ்சிய நில உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், ''சதுர அடிக்கு ரூ. 3,000 கொடுத்தால் இடத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.
பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. அதனை வழங்க முன்வராத மாநில அரசு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையே நடத்தி வந்தது. இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இருகூர் மற்றும் காளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பிளாட்களை அரசு கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்கப்பட்டது. காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் அரசின் முந்தைய விலையையே ஒப்புக் கொண்டு இடத்தை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, எஞ்சிய நில உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், ''சதுர அடிக்கு ரூ. 3,000 கொடுத்தால் இடத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.