திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், பல்லடத்திலிருந்து கோவை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பார்த்தசாரதி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், பல்லடத்திலிருந்து கோவை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பார்த்தசாரதி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.