கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற வைனவத்திருத்தளமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா திருத்தேரோட்டம் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் உற்சவ மூர்த்தியாக கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கருடாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். அதன்பின்னர், கோவில் கொடிமரத்தின் அடியில் உள்ள கருடாழ்வருக்கு பால், திருமஞ்சனம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை கோவில் பட்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலை சுற்றி எடுத்து வலம் வந்தனர். பின்னர், மதியம் பன்னிரெண்டு நாற்பது மணிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் மற்றும் தாசர்களின் சங்கொலி முழங்க கருடாழ்வார் கொடி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற வைனவத்திருத்தளமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா திருத்தேரோட்டம் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் உற்சவ மூர்த்தியாக கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கருடாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். அதன்பின்னர், கோவில் கொடிமரத்தின் அடியில் உள்ள கருடாழ்வருக்கு பால், திருமஞ்சனம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை கோவில் பட்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலை சுற்றி எடுத்து வலம் வந்தனர். பின்னர், மதியம் பன்னிரெண்டு நாற்பது மணிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் மற்றும் தாசர்களின் சங்கொலி முழங்க கருடாழ்வார் கொடி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது.