ஆசிரியர் திட்டியதால் குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த மாணவிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 5 பேரை ஆசிரியர் நேற்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த ஐந்து பேரும் கடையில் எலி மருந்தை வாங்கி, வகுப்பறையிலேயே வைத்து குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விடவே அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ஐந்து பேரையும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அந்த ஐந்து மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.



அப்போது அங்கிருந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...