பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டே ஊழல் தடுப்பு குழு மூலம் விசாரணை தொடங்கியதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடமாக இருக்கும் துணைவேந்தர் பணியிடத்திற்கு உயர்கல்வி துறை செயலாளர் மூலம் குழு அமைக்கப்பட்டு எவ்வித குறைகளுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடந்திருக்கிறது என்பது தவறான தகவலாகும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் வந்ததாலேயே, அதனை ஆய்வு செய்ய முன்கூட்டியே குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.
உயர்கல்வி துறையை பொருத்தவரை மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அளவில் 25.2 என உள்ளது. தமிழகத்தில் 46.9 சதவீதமாக மாணவர்களின் சேர்க்கை மாறியுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடமாக இருக்கும் துணைவேந்தர் பணியிடத்திற்கு உயர்கல்வி துறை செயலாளர் மூலம் குழு அமைக்கப்பட்டு எவ்வித குறைகளுமின்றி அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஊழல் நடந்திருக்கிறது என்பது தவறான தகவலாகும். பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் வந்ததாலேயே, அதனை ஆய்வு செய்ய முன்கூட்டியே குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.
உயர்கல்வி துறையை பொருத்தவரை மாணவர்களின் சேர்க்கை சதவீதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதுடன், இந்திய அளவில் 25.2 என உள்ளது. தமிழகத்தில் 46.9 சதவீதமாக மாணவர்களின் சேர்க்கை மாறியுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.