காவிரி நதிநீர் தீர்ப்புக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், ஏற்கனவே நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரை விட 14.75 டி.எம்.சி. நீர் குறைத்து வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கோவை காந்தி மாநகர் பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பேது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...