காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது : முதலமைச்சர்

தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் முத்தாலம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் தமிழகத்திற்கு,192 டி.எம்.சி. நீர் என்பதை 14.75 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்ற காவிரி வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. 

நதிகள் தேசிய சொத்து 24,24,708 லட்சம் பாசனப்பரப்பு தமிழகத்தில் உள்ளதை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்ற தீர்ப்பில் வரவேற்புக்குரிய அம்சமாகும். சட்டப்போராட்டத்தின் மூலமாக ஜெயலலிதாவால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது தமிழகத்திற்கு தீர்ப்பின் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். பல ஆண்டுகளாக எதிர்பார்த்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொழிற்சங்கங்களை அழைத்து பேசி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...