தொழில் முனைவோர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



தமிழ்நாடு தொழில்நிறுவன வசதி அமைப்பு அவசர சட்டம் 2017-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து  மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடர் நீக்க வசதி அமைப்பு குழு மூலம் விரைந்து பெற்று தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட முறைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான வசதி அமைப்பு குழு மாதத்திற்கு இரண்டு முறை கூடி மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பெற்றுத்தரும். மேலும், இந்த அவசர சட்டத்தின் படி, தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சம் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல் அளித்து விண்ணப்பம் அளிக்கும் தொழில் நிறுவனத்தின் மீது ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...