உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிராகக் கலவரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரைக் கண்டித்து த.பெ.தி.க.வினர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு டேபிள் சேர் போட்டு உணவுப் பொருட்களை வைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜீயருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், வைரமுத்து மன்னிப்பு கேட்க மாட்டார் என்று கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் ஜீயர் தேவையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுகிறார். இது அரசியல் சூழ்ச்சி. தோல்விகளை மறைக்க ஜீயரைப் பயன்படுத்தி மத பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சிக்கிறனர்" என்றார்.
