பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு : உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டி பஞ்சாயத்தில் 3,000 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்த ஊருக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசடைவதால் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



மேலும், பகல் நேரங்களில் குறைந்த அளவில் புகையினை வெளியேற்றும் தொழிற்சாலை இரவு நேரங்களில் அதிக அளவில் புகையினை வெளியேற்றுவதால் இரவு நேரங்களில் காற்று அதிக அளவில் மாசடைந்து சுவாச கோளாறுகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.



இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையினால் 50-க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...