திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூரில் கடந்த இரு நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாரலாக ஆரம்பித்த மழை பின்னர் மிதமான வேகத்துடன் பெய்ய ஆரம்பித்தது. அவினாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் சாலைகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக இதமான காலசூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மிதமான மழைக்கே மாநகரின் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போலக் காட்சியளித்தது.

திருப்பூரில் கடந்த இரு நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாரலாக ஆரம்பித்த மழை பின்னர் மிதமான வேகத்துடன் பெய்ய ஆரம்பித்தது. அவினாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் சாலைகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக இதமான காலசூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மிதமான மழைக்கே மாநகரின் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போலக் காட்சியளித்தது.