திருப்பூரில் பள்ளிகளுக்கிடையேயான புத்தாக்க அறிவியல் கண்காட்சி தொடக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி துவக்கி வைத்தார்.

தாராபுரம் சாலை ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான புத்தாக்க அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அறிவியல் அறிவு ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும் அறிவியல் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதை தவிர்க்க உருவாக்கப்பட்டதே புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாகும். அதன்படி, பள்ளி மாணாக்கர்களிடையே இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல் மேம்படுத்துதல் மற்றும் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே இன்ஸ்பயர் விருது திட்டமாகும்.

இதில், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணாக்கர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணாக்கர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்து மாணாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் தலா ரூ.10,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தங்கள் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 142 பள்ளிகளின் சார்பாக 142 அறிவியல் படைப்புகள் சிறப்பான முறையில் மாணவ மாணவியர்களின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.பொ.கனகமணி சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...