சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கோவை : சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சாலையோர திருவிழா வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தேவராஜ் பேசுகையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாகக் கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்க ஆவண மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். அது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சாலையோர திருவிழா வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தேவராஜ் பேசுகையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாகக் கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்க ஆவண மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். அது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.