பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் இருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் மர்மகும்பல்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக போலீஸார் பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக  உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரால்  பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



ரேசன் அரசி கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும். பல வாகன உரிமையாளர் பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை திருப்பி எடுப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வாகனங்களை ஏலம் விடப்படுகிறது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏராளமான வாகனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி கடத்தலில் ஈடுபட்ட மாருதி வேன் (KL.8.V.5364) பதிவு எண் கொண்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், அதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பானை (ஹார்ன்) மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதேபோல, பல வருடங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கார் ஒன்றில் இருந்து டயர் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது, காலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் அங்கு நடமாடி வந்தனர். அதற்கு, முன்னதாக, வேனில் ஒலி எழுப்பான் இருந்ததைக் கண்டேன். கருவூலதிற்கு வந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அங்கிருந்து சென்று விட்டனர். மாலையில், தன்னுடைய வாகனத்தை எடுக்க வந்தபோது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஒலி எழுப்பானை திருடி சென்றது தெரிய வந்தது. என்றார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...